என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் தேர்தலையொட்டி ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு 20 பேர் அதிரடி கைது
Byமாலை மலர்22 July 2019 11:23 AM GMT (Updated: 22 July 2019 11:23 AM GMT)
வேலூர் தேர்தலையொட்டி ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:
வேலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.வேலூர் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளன.
தேர்தலின் போது பிரச்சனை செய்பவர்கள் மற்றும் ரவுடிகள் பட்டியலை போலீசார் சேகரித்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 20 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யபட்டனர். மேலும் பட்டியலில் உள்ளவர்களை தேடிவருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த 6 மாதங்களாக 369 ரவுடிகள் கைது செய்யபட்டுள்ளனர். இதில் 35 பேர் குண்டர் சட்டத்தில் ஜெயலில் அடைக்கபட்டனர்.
தேர்தலின் போது பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் என கண்டறியபட்டால் அவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X