search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    ஸ்ரீபெரும்புதூர் அருகே வாலிபர் கழுத்தை அறுத்து கொலை

    ஸ்ரீபெரும்புதூர் அருகே வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வெங்காடு ஊராட்சியில் வயல்வெளியோரம் உள்ள முட்புதரில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திக்கு சென்று வாலிபர் உடலை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வாலிபரை மர்ம கும்பல் கழுத்தை அறுத்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது. கிராம மக்களிடம் விசாரித்த போது பிணமாக கிடந்தவர் அப்பகுதியை சேர்ந்தவர் இல்லை என்பது தெரிய வந்தது. எனவே அவரை வேறு எங்கேயோ கொலை செய்துவிட்டு உடலை வாகனத்தில் கொண்டு வந்து முட்புதரில் வீசி சென்று உள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் குறித்து விசாரித்து வருகின்றனர். பக்கத்து கிராமங்களில் யாராவது மாயமாகி உள்ளார்களா என்றும் விசாரிக்கிறார்கள்.

    Next Story
    ×