search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கீழ்வேளூர் அருகே பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி

    கீழ்வேளூர் அருகே பஸ் மோதி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த சிக்கல் ஊராட்சி பனைமேடுபகுதியை சேர்ந்தவர் ஏசுராஜ் மகன் ரோஸ்லின் ஆல்பர்ட் (வயது 18). இவர் நாகையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு ரோஸ்லின் ஆல்பர்ட் மோட்டார் சைக்கிளில் சிக்கலுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரோஸ்லின் ஆல்பர்ட்டை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகைஅரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×