என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை (கோப்பு படம்)
    X
    கொள்ளை (கோப்பு படம்)

    தொழிலதிபர் வீட்டில் 50 பவுன் நகை, ரூ.20 லட்சம் கொள்ளை

    வாணியம்பாடி தொழிலதிபர் வீட்டில் 50 பவுன் நகை, ரூ.25 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் வாணியம்பாடி டவுனில் ஜவுளிகடை நடத்தி வருகிறார். நேற்று இரவு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம கும்பல் வீட்டின் ஐன்னலை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அங்கு பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.25 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். வீட்டு முன்பு நிறுத்தியிருந்து பைக்கையும் ஓட்டி சென்று விட்டனர். இன்று காலை வீடு திரும்பிய வடிவேல் குடும்பத்தினர் வீட்டில் கொள்ளை போனது கண்டு திடுக்கிட்டனர்.

    இதுபற்றிய புகாரின் பேரில் வாணியம்பாடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×