search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற பெண் கைது

    கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் தெற்காலத்தூரில் சாராய விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கீழ்வேளூர் போலீசார் அங்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சாராயம் விற்றுக்கொண்டிருந்த பெண் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர் அதில் அவர் நாகை வெளிப்பாளையம் நல்லியான்தோட்டத்தை சேர்ந்த முத்துலட்சுமி (வயது 36) என்பதும் இவர் காரைக்காலில் இருந்து கடத்தி வந்து சாராய விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துலட்சுமியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×