search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ வைத்து கொளுத்தப்பட்ட மணிமாறனின் வீடு
    X
    தீ வைத்து கொளுத்தப்பட்ட மணிமாறனின் வீடு

    நாகையில் ஆட்டோ டிரைவர் வீட்டுக்கு தீ வைப்பு- மர்ம கும்பல் கைவரிசை

    நாகையில் ஆட்டோ டிரைவர் வீட்டுக்கு மர்ம கும்பல் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை ஆரிய நாட்டு தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் மணிமாறன் (வயது46) இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மணிமாறன் தனது அவரது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர் வீட்டு பின்புறமாக சென்று வீட்டை தீ வைத்து கொளுத்தி விட்டு தப்பி சென்று விட்டனர்.

    வீடு தீப்பிடித்து எரிவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் மணிமாறன் வீட்டின் கதவை தட்டினர். இதனால் கண்விழிந்து எழுந்த மணிமாறன், வீடு தீப்பிடித்து எரிவதை கண்டு திடுக்கிட்டார். உடனே அவர் தனது மனைவி இளவரசி, மகள் மம்தா, மற்றும் மகன்கள் மாதவன் பவித்திரன் ஆகியோர் அலறிக் கொண்டு வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர்.

    இதையடுத்து நாகை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும் தீ பரவி அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் நாசமானது. இந்த தீ விபத்தில் சேதமதிப்பு குறித்து உடனடியாக தெரிய விலலை.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர்.

    ஆட்டோ டிரைவர் மணிமாறன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து வீட்டை தீ வைத்து தப்பித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×