search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை அருகே அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதி 20 பேர் படுகாயம்
    X

    நாகை அருகே அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதி 20 பேர் படுகாயம்

    நாகை அருகே வேளாங்கண்ணி செல்வதற்காக அரசு பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த போது, தனியார் பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் பழைய பஸ் நிலையத்தில் வேளாங்கண்ணி செல்வதற்காக அரசு பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த போது, நாகப்பட்டினத்தில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்ற தனியார் பஸ் நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. 

    இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகை டவுன் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×