என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தரங்கம்பாடி அருகே காதலி வீட்டில் வாலிபர் தற்கொலை
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த வடகரை புலிகண்டபுத்தூரை சேர்ந்த மதியழகன் என்பவர் மகன் மணிகண்டன் (வயது 24). பி.காம். படித்துள்ளார். இவர் பொறையாறில் உள்ள கல்லூரியில் படித்த போது செம்பனார்கோவிலை அடுத்த கிடங்கல் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் அதே கல்லூரியில் படித்துள்ளார். அப்போது இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மணிகண்டன் வெளிநாடு சென்று 2 ஆண்டுகள் வேலை பார்த்து வந்தார். அவர் கடந்த மாதம் 9-ந் தேதி வெளிநாட்டில் இருந்து கிடங்கல் வந்து காதலியின் வீட்டு மாடியில் தங்கி இருந்துள்ளார். அவர் வெளிநாட்டில் இருந்து திரும்பும் போது தனது தாய் இறந்து விட்டதாத கூறி தன்னுடன் வேலை பார்க்கும் சிலரிடம் பணம் வாங்கி வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே வெளிநாட்டில் மணிகண்டனுக்கு பணம் கொடுத்த நபர் ஒருவர் சொந்த ஊர் வந்துள்ளார். அப்போது உயிருடன் இருக்கும் தனது தாய் இறந்து விட்டதாக மணிகண்டன் தன்னிடம் பொய் சொல்லி பணம் வாங்கி வந்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி அவர் வெளியில் சிலரிடம் கூறியதால் மணிகண்டன் அவமானம் அடைந்தார்.
இதைத்தொடர்ந்து மனமுடைந்த நிலையில் இருந்த மணிகண்டன் தனது காதலி வீட்டு மாடி அறையில் தூக்குப்போட்டு இன்று தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தெரியவந்ததும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் பொறையாறு இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொறையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
காதலி வீட்டில் காதலன் தற்கொலை செய்த சம்பவம் தரங்கம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்