என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனைவியை தாக்கி நகை கொள்ளை - ஆம்புலன்ஸ் டிரைவரிடம் 2-வது நாளாக போலீசார் விசாரணை
Byமாலை மலர்18 Jun 2019 1:45 PM GMT (Updated: 18 Jun 2019 1:45 PM GMT)
கடலூரில் மனைவியை தாக்கி நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து ஆம்புலன்ஸ் டிரைவரிடம் 2-வது நாளாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் வில்வநகர் பகவதி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 27). ஆம்புலன்ஸ் டிரைவர். இவருடைய காதல் மனைவி திவ்யபாரதி(25). இவர் பி.எஸ்சி. நர்சிங் படித்துள்ளார். இவர்களுக்கு அனுமித்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கடந்த 15-ந்தேதி இரவு பிரவீன்குமார் பணிக்கு செல்வதாக மனைவியிடம் கூறி விட்டு வெளியே சென்று விட்டார். அவர் சென்ற சிறிது நேரத்தில் 2 பேர் திவ்யபாரதியின் வீட்டுக்குள் புகுந்து, அவரை தாக்கி நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.
மேலும் இது பற்றி அவர் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏற்கனவே நன்கு அறிமுகமான நபர்களே இச்சம்பவத்தை அரங்கேற்றியிருக்கலாம் என்று தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசாரின் சந்தேக பார்வை பிரவீன்குமார் மீது விழுந்தது. இதனால் அவரை அழைத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து நேற்று 2-வது நாளாக பிரவீன்குமாரிடம் விசாரணை நடத்தினர். மேலும் திவ்யபாரதியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் வில்வநகர் பகவதி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 27). ஆம்புலன்ஸ் டிரைவர். இவருடைய காதல் மனைவி திவ்யபாரதி(25). இவர் பி.எஸ்சி. நர்சிங் படித்துள்ளார். இவர்களுக்கு அனுமித்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கடந்த 15-ந்தேதி இரவு பிரவீன்குமார் பணிக்கு செல்வதாக மனைவியிடம் கூறி விட்டு வெளியே சென்று விட்டார். அவர் சென்ற சிறிது நேரத்தில் 2 பேர் திவ்யபாரதியின் வீட்டுக்குள் புகுந்து, அவரை தாக்கி நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.
மேலும் இது பற்றி அவர் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏற்கனவே நன்கு அறிமுகமான நபர்களே இச்சம்பவத்தை அரங்கேற்றியிருக்கலாம் என்று தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசாரின் சந்தேக பார்வை பிரவீன்குமார் மீது விழுந்தது. இதனால் அவரை அழைத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து நேற்று 2-வது நாளாக பிரவீன்குமாரிடம் விசாரணை நடத்தினர். மேலும் திவ்யபாரதியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X