search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனைவியை தாக்கி நகை கொள்ளை - ஆம்புலன்ஸ் டிரைவரிடம் 2-வது நாளாக போலீசார் விசாரணை
    X

    மனைவியை தாக்கி நகை கொள்ளை - ஆம்புலன்ஸ் டிரைவரிடம் 2-வது நாளாக போலீசார் விசாரணை

    கடலூரில் மனைவியை தாக்கி நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து ஆம்புலன்ஸ் டிரைவரிடம் 2-வது நாளாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் வில்வநகர் பகவதி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 27). ஆம்புலன்ஸ் டிரைவர். இவருடைய காதல் மனைவி திவ்யபாரதி(25). இவர் பி.எஸ்சி. நர்சிங் படித்துள்ளார். இவர்களுக்கு அனுமித்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கடந்த 15-ந்தேதி இரவு பிரவீன்குமார் பணிக்கு செல்வதாக மனைவியிடம் கூறி விட்டு வெளியே சென்று விட்டார். அவர் சென்ற சிறிது நேரத்தில் 2 பேர் திவ்யபாரதியின் வீட்டுக்குள் புகுந்து, அவரை தாக்கி நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.

    மேலும் இது பற்றி அவர் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏற்கனவே நன்கு அறிமுகமான நபர்களே இச்சம்பவத்தை அரங்கேற்றியிருக்கலாம் என்று தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசாரின் சந்தேக பார்வை பிரவீன்குமார் மீது விழுந்தது. இதனால் அவரை அழைத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து நேற்று 2-வது நாளாக பிரவீன்குமாரிடம் விசாரணை நடத்தினர். மேலும் திவ்யபாரதியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×