search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டையில் தொழிலதிபர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை
    X

    புதுக்கோட்டையில் தொழிலதிபர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை

    புதுக்கோட்டை அருகே தொழிலதிபர் வீட்டில் 35 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே உள்ள முத்துடையான் பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ், தொழிலதிபரான இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை, பணம் கொள்ளை போயிருந்தது. 35 பவுன் நகைகள் வரை கொள்ளை போயிருக்கலாம் என தெரிகிறது.

    வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×