என் மலர்
செய்திகள்

மதுரையில் லாரி மோதி கர்நாடக வாலிபர் பலி
மதுரையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கர்நாடகவை சேர்ந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
கர்நாடக மாநிலம் ஹீப்ளி பகுதியை சேர்ந்தவர் நிங்கப்பா. இவரது மகன்கள் அபிஷேக்குமார் (வயது 19), ஆதர்ஷ்(18). இவர்கள் இருவரும் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக தனித்தனி மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டனர்.
நேற்று மதுரை வந்த அவர்கள் நெல்லை செல்வதற்காக மதுரை- திருப்பரங்குன்றம் ரோட்டில் சென்றனர். பசுமலை அருகே உள்ள விபூதி விநாயகர் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த லாரி ஆதர்ஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த ஆதர்ஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதைப்பார்த்த அபிஷேக் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதது பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து கரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் ஹீப்ளி பகுதியை சேர்ந்தவர் நிங்கப்பா. இவரது மகன்கள் அபிஷேக்குமார் (வயது 19), ஆதர்ஷ்(18). இவர்கள் இருவரும் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக தனித்தனி மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டனர்.
நேற்று மதுரை வந்த அவர்கள் நெல்லை செல்வதற்காக மதுரை- திருப்பரங்குன்றம் ரோட்டில் சென்றனர். பசுமலை அருகே உள்ள விபூதி விநாயகர் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த லாரி ஆதர்ஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த ஆதர்ஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதைப்பார்த்த அபிஷேக் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதது பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து கரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story