search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவையாறு அருகே லாரி மோதி வாலிபர் பலி
    X

    திருவையாறு அருகே லாரி மோதி வாலிபர் பலி

    திருவையாறு அருகே லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவையாறு:

    திருவையாறு அடுத்த கஸ்தூரி பாய் நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது37). இவர் மோட்டார் சைக்கிளில் கஸ்தூரிபாய் நகரிலிருந்து விளாங்குடி சென்றுகொண்டிருந்தார். அப்போது விளாங்குடியிலிருந்து திருவையாறு நோக்கி லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. அந்த லாரி சோப்பு கம்பெனி அருகே மெயின்ரோட்டில் வரும்போது எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் ராதாகிருஷ்ணன் பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

    இதுகுறித்து ராதா கிருஷ்ணன் மனைவி ராஜாத்தி கொடுத்த புகாரின் பேரில் திருவையாறு இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் கீழப்பழுவூரை சேர்ந்த முத்தமிழ்செல்வன்(29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
    Next Story
    ×