search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாணியம்பாடி அருகே பைக் மரத்தில் மோதி 2 பேர் பலி
    X

    வாணியம்பாடி அருகே பைக் மரத்தில் மோதி 2 பேர் பலி

    வாணியம்பாடி அருகே மோட்டார் சைக்கிள் தென்னை மரத்தில் மோதி 2 பேர் இறந்தனர்.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே உள்ள கோவிந்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வேலாயுதம் (50), பார்த்திபன் (55) வடசேரியில் பார்த்திபன் மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளார். மகள் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.

    இதுபற்றி பேசுவதற்காக பார்த்திபன், வேலாயுதம் இருவரும் நேற்று வடசேரிக்கு சென்றுவிட்டு மாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். வெங்கடாபுரம் கூட்ரோடு அருகே வந்தபோது பைக் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தென்னை மரத்தில் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். வாணியம்பாடி தாலுகா போலீசார் அவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வேலாயுதம் இறந்தார்.

    பார்த்திபனை மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நள்ளிரவு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×