search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
    X

    திருவள்ளூர் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

    திருவள்ளூர் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த திருகோவில்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நாதமுனி. விவசாயி. இவரது மனைவி அனிதா (49). இவர் வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க தாலி சரடு மற்றும் செயினை 2 பேர் பறித்தனர்.

    இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். திருடன்... திருடன்... என கூச்சலிட, அந்த 2 பேரும் பைக்கில் தப்பி ஓடினார்கள். அனிதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அனிதா சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, செயினை பறித்த கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×