search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்டையார்பேட்டை அருகே சிறுமியிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது
    X

    தண்டையார்பேட்டை அருகே சிறுமியிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

    தண்டையார்பேட்டை அருகே சிறுமியிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை காந்தி நகரை சேர்ந்த சிறுமி திவ்யா. இவர் செல்போன் பேசியபடி அங்குள்ள வைத்தியநாதன் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் திவ்யாவிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓடினர்.

    இதில் ஒருவர் நிலைதடுமாறி கீழேவிழுந்தார் சிறுமியின் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து செல்போன் பறித்த கொள்ளையர்களை பிடித்தனர். இதில் ஒருவர் காசிமேட்டை சேர்ந்த ரூபான்குமார் (19), மற்றொருவன் 16 வயது சிறுவன். 2 பேரையும் ஆர்.கே.நகர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×