என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
காரிமங்கலம் பெரியாம்பட்டி அருகே கார் மோதி கூலித்தொழிலாளி பலி
Byமாலை மலர்18 May 2019 5:51 PM IST (Updated: 18 May 2019 5:51 PM IST)
காரிமங்கலம் பெரியாம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற கூலித்தொழிலாளி மீது கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
காரிமங்கலம்:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள காளப்பனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 58). கூலி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் இவர் நேற்று மாலை தனது சைக்கிளில் செல்லும்போது, பெரியாம்பட்டி தேசிய நெடுஞ்சாலை சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது பின்னால் பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்துவந்த காரிமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்ப வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X