என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வில்லியனூரில் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த பெண் தற்கொலை
Byமாலை மலர்18 May 2019 10:25 AM GMT (Updated: 18 May 2019 10:25 AM GMT)
வில்லியனூரில் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர்:
வில்லியனூர் பத்மினி நகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது41). இவர் கணவரை விட்டு பிரிந்து தனியாக வந்து தனது மகனுடன் வசித்து வந்தார். புதுவையில் உள்ள பாத்திரக்கடை ஒன்றில் வேலைபார்த்து லட்சுமி குடும்பத்தை நடத்தி வந்தார்.
இதற்கிடையே லட்சுமிக்கு நெஞ்வலி மற்றும் ரத்த அழுத்த நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆஸ்பத்திரியில் காண்பித்து சிகிச்சை பெற்று வந்தும் நோய் முற்றிலுமாக குணமாகவில்லை. இதனால் விரக்தியில் இருந்து வந்த லட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று இரவு மகன் தூங்கிய பின்னர் லட்சுமி மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு தினகரன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X