search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின் திண்ணையில் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்ட காட்சி.
    X
    மு.க.ஸ்டாலின் திண்ணையில் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்ட காட்சி.

    சூலூர் தொகுதியில் திண்ணையில் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகேட்ட மு.க.ஸ்டாலின்

    தமிழகத்தில் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சூலூர் தொகுதியில் திண்ணையில் அமர்ந்து மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    கோவை:

    கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே 2 நாட்கள் பிரசாரம் செய்தார்.

    இந்நிலையில் நாளை மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைய உள்ள நிலையில் இன்று இறுதி கட்ட பிரசாரத்தை மு.க. ஸ்டாலின் மேற்கொண்டார்.

    இன்று காலை 8 மணியளவில் மு.க.ஸ்டாலின் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுல்தான்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட அப்பநாயக்கன் பட்டிக்கு சென்றார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    அப்போது பொதுமக்கள் மு.க. ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பின்னர் மக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தனர். வெற்றி பெற்றதும் அனைத்து குறைகளையும் சரி செய்து தருவதாக உறுதியளித்தார்.

    தொடர்ந்து ஏ.டி.காலனி பகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள வீட்டின் முன்பு உள்ள திண்ணையில் அமர்ந்து கலந்துரையாடினார்.

    அப்போது பெண் ஒருவர் மு.க. ஸ்டாலினுக்கு டீ கொடுத்தார். அதனை வாங்கி குடித்த மு.க. ஸ்டாலின் மக்களிடம் தொடர்ந்து கலந்துரையாடி பொதுக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    தொடர்ந்து இன்று மாலை 6.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் சூலூர் தொகுதிக்குட்பட்ட முத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சி குரும்பபாளையம், வங்கி அருகில் வேன் பிரசாரம் செய்கிறார். 7 மணிக்கு கரவழி மாதப்பூரிலும், இரவு 8 மணிக்கு இருகூரிலும் வேன் பிரசாரம் செய்கிறார்.
    Next Story
    ×