search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாசரேத் அருகே தொழிலதிபரை தாக்கி ரூ.1 லட்சம் பணம் பறிப்பு
    X

    நாசரேத் அருகே தொழிலதிபரை தாக்கி ரூ.1 லட்சம் பணம் பறிப்பு

    நாசரேத் அருகே தொழிலதிபரை தாக்கி ரூ.1 லட்சம் பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    நாசரேத் அருகே உள்ள அரியான்மொழியைச் சேர்ந்தவர் அந்தோணி பிச்சை. இவரது மகன் வேல்துரை (வயது47). தொழிலதிபர். சென்னையில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பட்டு மகன் ராஜலிங்கம். இவர் வேல்துரை நடத்தி வரும் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் சூப்பர் மார்க்கெட் பணத்தை கையாடல் செய்ததாக ராஜலிங்கத்தை வேலையை விட்டு நீக்கினார் வேல்துரை. இதனால் வேல்துரை மீது ராஜலிங்கம் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

    இதற்கிடையே அரியான் மொழியில் தான் கட்டி வரும் வீட்டை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று வீட்டிற்கு பொருட்கள் வாங்குவதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    அச்சம்பாடு அருகே வேல்துரை வந்தபோது ராஜலிங்கம் உட்பட 6 பேர் கும்பல் பைக்கை வழிமறித்தனர். பின்னர் வேல்துரையை தாக்கி அவர் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    காயமடைந்த வேல்துரை இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் ராஜலிங்கம், முத்துலிங்கம், முத்துக்குமார், சரவணகுமார், மற்றொரு ராஜலிங்கம், சித்திரை செல்வம் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    Next Story
    ×