என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரையில் ஷேர்ஆட்டோவில் பயணியிடம் நகை கொள்ளை
மதுரை:
மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்தவர் ராமன் (வயது 45). இவர் சம்பவத்தன்று பாத்திமா காலேஜில் இருந்து கோசாக்குளத்துக்கு ஷேர் ஆட்டோவில் சென்றார்.
அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி ராமன் அணிந்திருந்த 5 பவுன் செயினை மர்ம நபர் திருடிக்கொண்டு தப்பினார்.
தல்லாகுளம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் கார்த்திகாதேவி (21). இவர் சம்பவத்தன்று அதிகாலை காந்தி மியூசியம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கார்த்திகாதேவி அணிந்திருந்த 1 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.
இந்த 2 சம்பவங்களும் கடந்த மாதம் முதல் மற்றும் 2-வது வாரத்தில் நடந்துள்ளன.
நகையை பறிகொடுத்தவர்கள் உடனே தல்லாகுளம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கொள்ளை சம்பவம் நடந்த 1 மாதத்துக்கு பின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் தீர்வு கிடைக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தவுடன் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்