என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை அருகே ஓட்டல் உரிமையாளரை தாக்கிய 3 பேர் கைது
Byமாலை மலர்9 May 2019 11:49 AM GMT (Updated: 9 May 2019 11:49 AM GMT)
தஞ்சை அருகே ஓட்டரி உரிமையாளரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ளவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோவில் பாக்கியம் நகரை சேர்ந்தவர் பிரசாத் (வயது 40). இவர் மாரியம்மன் கோவில் அருகே சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார்.
இவரது ஓட்டலுக்கு தஞ்சை ராராமுத்திர கோட்டை புதுத்தெருவைச் சேர்ந்த பழனிவேல் (23), அஜித்குமார் (26), மோகன் (29) மற்றும் பிரபாகரன் (32) ஆகிய 4 பேர் சாப்பிட சென்றனர். அவர்கள் ஓட்டலில் இருந்த பிரசாத்திடம் சாப்பாடு இருக்கிறதா? என கேட்டுள்ளனர். அவர் சாப்பாடு இல்லை காலியாகி விட்டது என்று கூறியுள்ளார். இதனால் அவர்கள் பிரசாத்திடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பழனிவேல் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து பிரசாத்தை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் பிரசாத் பலத்த காயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசில் பிரசாத் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிவேல், அஜித்குமார்,மோகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரபாகரனை தேடி வருகின்றனர்.
தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோவில் பாக்கியம் நகரை சேர்ந்தவர் பிரசாத் (வயது 40). இவர் மாரியம்மன் கோவில் அருகே சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார்.
இவரது ஓட்டலுக்கு தஞ்சை ராராமுத்திர கோட்டை புதுத்தெருவைச் சேர்ந்த பழனிவேல் (23), அஜித்குமார் (26), மோகன் (29) மற்றும் பிரபாகரன் (32) ஆகிய 4 பேர் சாப்பிட சென்றனர். அவர்கள் ஓட்டலில் இருந்த பிரசாத்திடம் சாப்பாடு இருக்கிறதா? என கேட்டுள்ளனர். அவர் சாப்பாடு இல்லை காலியாகி விட்டது என்று கூறியுள்ளார். இதனால் அவர்கள் பிரசாத்திடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பழனிவேல் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து பிரசாத்தை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் பிரசாத் பலத்த காயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசில் பிரசாத் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிவேல், அஜித்குமார்,மோகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரபாகரனை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X