என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் பனியன் தொழிலாளி கொலையில் தம்பி அதிரடி கைது
Byமாலை மலர்8 May 2019 9:32 AM GMT (Updated: 8 May 2019 9:32 AM GMT)
திருப்பூர் பனியன் தொழிலாளி கொலையில் அவரது தம்பியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் சரங்காடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). பனியன் தொழிலாளி. இவரது மனைவி சரசு (35). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சரசு மகனை அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். சிவக்குமார் தனது தாய் ரத்தினம்மாளுடன் வசித்து வந்தார்.
ரத்தினம்மாள் வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார். முதல்மாடியில் வசித்து வருகிறார். தனியே வசிக்கும் மகனுக்காக வாடகை வீட்டில் ஒரு வீட்டை ஒதுக்கி தந்தார். அதில் அவர் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றிருந்த ரத்தினம்மாள் நேற்று காலை ஊர் திரும்பினார். அப்போது வீட்டில் சிவக்குமார் கத்திக்குத்து காயங்களுடன் குடல் சரிந்து ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் உதவி கமிஷனர் நவீன்குமார், திருப்பூர் நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த சிவக்குமாரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ஒரு வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று துருவித்துருவி விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கொலையாளி அல்ல என்பதை போலீசார் அறிந்து அவரை விடுவித்தனர். இதனையடுத்து போலீசார் விசாரணையை வேறு கோணத்தில் அணுகினர். கொலையான சிவக்குமாரின் நீண்ட நாள் நண்பர் ஒருவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறும்போது, நேற்று காலை புதுக்காடு என்ற பகுதிக்கு நான் மது குடிக்க சென்றேன். அப்போது கொலையான சிவக்குமாரின் தப்பி ரமேஷ் மதுக்குடிக்க வந்தார். காலையில் அவர் மதுக்குடிக்க மாட்டார். ஏன் காலையிலேயே மதுக்குடிக்க வந்தாய்? என்று கேட்டபோது ரமேஷ் என்னிடம் எனது அண்ணன் தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியாக உள்ளதால் மது குடிக்க வந்தேன் என்று கூறினார். நீண்ட நாள் நண்பர் என்பதால் நான் ஓடி வந்து வீட்டில் பார்த்தபோது சிவக்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது என்று போலீசில் தகவல் கூறினார்.
இதனையடுத்து போலீசார் கொலையான சிவக்குமாரின் தம்பி ரமேசை பிடித்து விசாரணை நடத்தினர். ரமேஷ் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். கிடுக்கிப்பிடி விசாரணையில் சிவக்குமாரை கொலை செய்ததை ரமேஷ் ஒப்புக்கொண்டார்.
போலீசில் அவர் கொடுத்து வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தோம். மாடியில் நாங்கள் குடியிருந்து வருகிறோம். குடிப்பழக்கத்தால் மனைவி, மகனை பிரிந்த அண்ணன் வசிக்க 3 வீட்டில் ஒரு வீட்டை ஒதுக்கி கொடுத்தோம். ஆனால் அண்ணன் தினமும் குடித்து விட்டு வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் தகராறு செய்து வந்தார். கொலையான முதல்நாள் இரவும் தகராறு செய்தார்.
நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு அண்ணன் வீட்டில் இருந்தார். தகராறு செய்ததை தட்டிக்கேட்க சென்றேன். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அண்ணன் என்னை குத்த கத்தியை எடுத்து வந்தார். சுதாரித்துக்கொண்ட நான் கத்தியை அவரிடம் இருந்து பறித்து அவரை 10 முறை சரமாரியாக குத்தினேன். அப்போது அக்கம் பக்கத்தினர் வேலைக்கு சென்றிருந்ததால் யாருக்கும் தெரியவில்லை.
கத்தியால் குத்தியதில் குடல் சரிந்து ரத்தவெள்ளத்தில் அண்ணன் இறந்து விட்டார். அவர் இறந்த பின்னர் கதவை லேசாக சாத்திவிட்டு நான் வீட்டுக்கு சென்று விட்டேன். கொலையில் இருந்து தப்பிக்க விடிய விடிய திட்டமிட்டேன்.
விடிந்ததும் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற அம்மா ரத்தினம்மாள் ஊர் திரும்பி விட்டதாகவும், தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு போனில் கூறினார். இதனையடுத்து நான் மோட்டார் சைக்கிளில் தாயை அழைத்துக்கொண்டு வீட்டில் இறங்கி விட்டு விட்டு புதுக்காடு மதுக்கடைக்கு சென்றேன். அங்கு நான் பதட்டமாக இருப்பதை பார்த்த அண்ணனின் நண்பர் விசாரித்தார். அப்போது அண்ணன் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினேன். அண்ணன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து தாய் கதறியதையடுத்து சம்பவம் வெளியே தெரிந்தது.
உடனே வீட்டுக்கு சென்று நான் போலீசில் புகார் செய்தேன். போலீசார் வாடகைக்கு குடியிருந்த வாலிபரை விசாரணைக்கு அழைத்துச்சென்றதால் நான் தப்பித்து விட்டேன் என்று நம்பினேன். ஆனால் போலீஸ் விசாரணையில் நான் மாட்டிக்கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனையடுத்து போலீசார் ரமேசை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலையான சில மணி நேரங்களிலேயே கொலையாளியை கண்டுபிடித்த போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
திருப்பூர் சரங்காடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). பனியன் தொழிலாளி. இவரது மனைவி சரசு (35). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சரசு மகனை அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். சிவக்குமார் தனது தாய் ரத்தினம்மாளுடன் வசித்து வந்தார்.
ரத்தினம்மாள் வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார். முதல்மாடியில் வசித்து வருகிறார். தனியே வசிக்கும் மகனுக்காக வாடகை வீட்டில் ஒரு வீட்டை ஒதுக்கி தந்தார். அதில் அவர் வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றிருந்த ரத்தினம்மாள் நேற்று காலை ஊர் திரும்பினார். அப்போது வீட்டில் சிவக்குமார் கத்திக்குத்து காயங்களுடன் குடல் சரிந்து ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் உதவி கமிஷனர் நவீன்குமார், திருப்பூர் நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த சிவக்குமாரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ஒரு வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று துருவித்துருவி விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கொலையாளி அல்ல என்பதை போலீசார் அறிந்து அவரை விடுவித்தனர். இதனையடுத்து போலீசார் விசாரணையை வேறு கோணத்தில் அணுகினர். கொலையான சிவக்குமாரின் நீண்ட நாள் நண்பர் ஒருவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறும்போது, நேற்று காலை புதுக்காடு என்ற பகுதிக்கு நான் மது குடிக்க சென்றேன். அப்போது கொலையான சிவக்குமாரின் தப்பி ரமேஷ் மதுக்குடிக்க வந்தார். காலையில் அவர் மதுக்குடிக்க மாட்டார். ஏன் காலையிலேயே மதுக்குடிக்க வந்தாய்? என்று கேட்டபோது ரமேஷ் என்னிடம் எனது அண்ணன் தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியாக உள்ளதால் மது குடிக்க வந்தேன் என்று கூறினார். நீண்ட நாள் நண்பர் என்பதால் நான் ஓடி வந்து வீட்டில் பார்த்தபோது சிவக்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது என்று போலீசில் தகவல் கூறினார்.
இதனையடுத்து போலீசார் கொலையான சிவக்குமாரின் தம்பி ரமேசை பிடித்து விசாரணை நடத்தினர். ரமேஷ் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். கிடுக்கிப்பிடி விசாரணையில் சிவக்குமாரை கொலை செய்ததை ரமேஷ் ஒப்புக்கொண்டார்.
போலீசில் அவர் கொடுத்து வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தோம். மாடியில் நாங்கள் குடியிருந்து வருகிறோம். குடிப்பழக்கத்தால் மனைவி, மகனை பிரிந்த அண்ணன் வசிக்க 3 வீட்டில் ஒரு வீட்டை ஒதுக்கி கொடுத்தோம். ஆனால் அண்ணன் தினமும் குடித்து விட்டு வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் தகராறு செய்து வந்தார். கொலையான முதல்நாள் இரவும் தகராறு செய்தார்.
நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு அண்ணன் வீட்டில் இருந்தார். தகராறு செய்ததை தட்டிக்கேட்க சென்றேன். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அண்ணன் என்னை குத்த கத்தியை எடுத்து வந்தார். சுதாரித்துக்கொண்ட நான் கத்தியை அவரிடம் இருந்து பறித்து அவரை 10 முறை சரமாரியாக குத்தினேன். அப்போது அக்கம் பக்கத்தினர் வேலைக்கு சென்றிருந்ததால் யாருக்கும் தெரியவில்லை.
கத்தியால் குத்தியதில் குடல் சரிந்து ரத்தவெள்ளத்தில் அண்ணன் இறந்து விட்டார். அவர் இறந்த பின்னர் கதவை லேசாக சாத்திவிட்டு நான் வீட்டுக்கு சென்று விட்டேன். கொலையில் இருந்து தப்பிக்க விடிய விடிய திட்டமிட்டேன்.
விடிந்ததும் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற அம்மா ரத்தினம்மாள் ஊர் திரும்பி விட்டதாகவும், தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு போனில் கூறினார். இதனையடுத்து நான் மோட்டார் சைக்கிளில் தாயை அழைத்துக்கொண்டு வீட்டில் இறங்கி விட்டு விட்டு புதுக்காடு மதுக்கடைக்கு சென்றேன். அங்கு நான் பதட்டமாக இருப்பதை பார்த்த அண்ணனின் நண்பர் விசாரித்தார். அப்போது அண்ணன் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினேன். அண்ணன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து தாய் கதறியதையடுத்து சம்பவம் வெளியே தெரிந்தது.
உடனே வீட்டுக்கு சென்று நான் போலீசில் புகார் செய்தேன். போலீசார் வாடகைக்கு குடியிருந்த வாலிபரை விசாரணைக்கு அழைத்துச்சென்றதால் நான் தப்பித்து விட்டேன் என்று நம்பினேன். ஆனால் போலீஸ் விசாரணையில் நான் மாட்டிக்கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனையடுத்து போலீசார் ரமேசை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலையான சில மணி நேரங்களிலேயே கொலையாளியை கண்டுபிடித்த போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X