என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
பாலியல் புகாரில் சிக்கிய ஈரோடு தொழில் அதிபர் மீது 3 பிரிவுகளில் வழக்கு
By
மாலை மலர்7 May 2019 10:33 AM GMT (Updated: 7 May 2019 10:33 AM GMT)

பாலியல் பலாத்காரம் செய்ததாக ஈரோடு தொழில் அதிபர் மீது மேலும் பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோட்டில் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, அதனை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி, தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த ஈரோடு வில்லரசம்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (37) என்பவரை ஈரோடு மகளிர் போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
தற்போது அவர் கோர்ட் உத்தரவின் படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ராதாகிருஷ்ணனால் ஏராளமான பெண்கள், கல்லூரி மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போலீசார் ஒரே ஒரு பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை மட்டும் பதிவு செய்து கைது செய்தனர். ஆனால், பாதிக்கப்பட்ட மேலும் பெண்கள் புகார் அளித்தால், ராதாகிருஷ்ணனை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்திருந்தனர்.
இதன் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த திருமணம் ஆன 26 வயது இளம்பெண் ஒருவர், ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு எஸ்பி அலுவலகத்தில், எஸ்.பி சக்தி கணேசனிடம் புகார் அளித்தார்.
புகாரில் எனக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு திருமணம் ஆனது. எங்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அப்போது நான் குடும்ப வறுமையின் காரணமாக கார்மெண்ட்ஸ்க்கு வேலைக்கு சென்று வந்தேன். என் கணவர் மதுப்பழக்கம் அடிமையானவர். இதனால் டாஸ்மாக் பாரில் தினந்தோறும் சென்று வருவார். அப்போது, ராதாகிருஷ்ணன் என் கணவரிடம் பழகி, அவருக்கு மது வாங்கி கொடுத்து அடிமையாக்கினார். பிறகு வீட்டுக்கு அடிக்கடி வந்து நல்லது செய்வதுபோல் நடித்து பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதனை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்தேன். தற்போது ராதாகிருஷ்ணன் கைதான விவகாரம் தொடர்பாக செய்தி வந்ததால் புகார் செய்துள்ளேன் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து எஸ்.பி சக்தி கணேசன் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார் மீது ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்து ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் மீது இன்று மேலும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
ஈரோட்டில் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, அதனை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி, தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த ஈரோடு வில்லரசம்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (37) என்பவரை ஈரோடு மகளிர் போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
தற்போது அவர் கோர்ட் உத்தரவின் படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ராதாகிருஷ்ணனால் ஏராளமான பெண்கள், கல்லூரி மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போலீசார் ஒரே ஒரு பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை மட்டும் பதிவு செய்து கைது செய்தனர். ஆனால், பாதிக்கப்பட்ட மேலும் பெண்கள் புகார் அளித்தால், ராதாகிருஷ்ணனை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்திருந்தனர்.
இதன் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த திருமணம் ஆன 26 வயது இளம்பெண் ஒருவர், ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு எஸ்பி அலுவலகத்தில், எஸ்.பி சக்தி கணேசனிடம் புகார் அளித்தார்.
புகாரில் எனக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு திருமணம் ஆனது. எங்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அப்போது நான் குடும்ப வறுமையின் காரணமாக கார்மெண்ட்ஸ்க்கு வேலைக்கு சென்று வந்தேன். என் கணவர் மதுப்பழக்கம் அடிமையானவர். இதனால் டாஸ்மாக் பாரில் தினந்தோறும் சென்று வருவார். அப்போது, ராதாகிருஷ்ணன் என் கணவரிடம் பழகி, அவருக்கு மது வாங்கி கொடுத்து அடிமையாக்கினார். பிறகு வீட்டுக்கு அடிக்கடி வந்து நல்லது செய்வதுபோல் நடித்து பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதனை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்தேன். தற்போது ராதாகிருஷ்ணன் கைதான விவகாரம் தொடர்பாக செய்தி வந்ததால் புகார் செய்துள்ளேன் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து எஸ்.பி சக்தி கணேசன் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார் மீது ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்து ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் மீது இன்று மேலும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
