என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் அருகே என்ஜினீயர் வீட்டில் நகை - பணம் கொள்ளை
Byமாலை மலர்28 April 2019 10:14 AM GMT (Updated: 28 April 2019 10:14 AM GMT)
திருவள்ளூரில் பொதுப்பணித்துறை என்ஜினீயர் வீட்டில் 60 பவுன் நகை- ரூ.3 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் கேஜிபி நகரை சேர்ந்தவர் வர்மா (65). ஓய்வு பெற்ற பொதுப் பணித்துறை என்ஜினீயர். இவரது மனைவி சவுதா. இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று மனைவியை பார்க்க வர்மா வீட்டைப் பூட்டிவிட்டு மருத்துவ மனைக்கு சென்றுள்ளார். இன்று காலை வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி பீரோவில் மருத்துவச் செலவுக்காக வைத்திருந்த ரூ.3 லட்சம் பணம், வைரக்கற்கள் பதிக்கப்பட்ட கம்மல், வளையல் உள்ளிட்ட 60 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X