search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்பக்கூடல் அருகே விவசாயி வீட்டில் 8 பவுன் நகை கொள்ளை
    X

    ஆப்பக்கூடல் அருகே விவசாயி வீட்டில் 8 பவுன் நகை கொள்ளை

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 8½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள முன்னம் அடுத்த செங்கோடம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 64) விவசாயி.

    மாரிமுத்து சம்பவத்தன்று வேலை வி‌ஷயமாக வெளியே சென்றுவிட்டார். பின்னர் மீண்டும் மாரிமுத்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைந்து கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன. வீட்டு அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து இருந்தன. பீரோவில் இருந்த தங்க கொடி செயின், மோதிரம் என மொத்தம் 8 ½ பவுன் நகை திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் .

    இதுகுறித்து மாரிமுத்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டனர்.

    மாரிமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லாததை தெரிந்து கொண்டு மர்ம நபர் நோட்டமிட்டு கைவரிசை காட்டி உள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×