search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தவளக்குப்பம் அருகே கணவருடன் தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை
    X

    தவளக்குப்பம் அருகே கணவருடன் தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை

    தவளக்குப்பம் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    பாகூர்:

    தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம் பால் வாடி தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது 2-வது மனைவி சித்ரா (வயது 42). இவர்கள் இருவரும் வீட்டின் அருகிலேயே அம்மன் கோவில் கட்டி வழிபட்டு வந்தனர். மேலும் குறி சொல்லியும் வந்தனர். மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் மீது அதிக தெய்வ பக்தி கொண்ட கணவன்-மனைவி இருவரும் கடந்த 20 நாட்களாக மேல்மலையனூரில் தங்கி இருந்து விட்டு நேற்று வீடு திரும்பினர். 

    இந்த நிலையில் நேற்று மாலை சித்ரா பக்கத்து வீட்டு பெண்ணிடம் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது நாகராஜ் இதை பார்த்து சித்ராவிடம் ஏன் பக்கத்து வீட்டு பெண்ணிடம் பேசினாய்? என்று கேட்டு கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சித்ரா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் அறை கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    தீ உடல்முழுவதும் பரவியதால் வலி தாங்காமல் சித்ரா அலறி துடித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து தீயை அணைத்தனர். பின்னர் சித்ராவை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சித்ரா பரிதாபமாக இறந்து போனார். 

    இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியூட்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×