search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்யாறு - அரக்கோணத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
    X

    செய்யாறு - அரக்கோணத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

    செய்யாறு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் இன்று சாலை மறியல் செய்தனர்.

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த அனக்காவூர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கபடவிலலை என்று கூறபடுகிறது. இதனால் பெண்கள் நீண்ட தூரம் சென்று குடிநீர் சுமந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறபடுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் செய்யாறு வந்தவாசி செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பினர்.

    இது குறித்து தகவலறிந்த செய்யாறு தாசில்தார் மூர்த்தி, அனக்காவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அரக்கோணம் அருகே உள்ள பரமேஸ்வர மங்கலம் பகுதியில் 2000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த 3 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கபடவில்லை.

    இது குறித்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கபட வில்லை என்று கூறபடுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரக்கோணம் காஞ்சிபுரம் செல்லும் சாலையில் இன்று மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் குமார் மற்றும் பஞ்சாயத்து செயலர் ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×