என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்
    X

    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தக்கோலம்:

    அரக்கோணம் ரெயில் நிலைய 1-வது பிளாட்பாரத்தில் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அரக்கோணம் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்பாபு, வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்தவர் குறித்து விசாரைணை நடத்தினர். ஆனால் அவர் யார் என தெரியவில்லை. இறந்து கிடந்தவரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர், உடல்நல குறைவால் இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×