என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கணவனுடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்து பெண் தற்கொலை- போலீசார் விசாரணை கணவனுடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்து பெண் தற்கொலை- போலீசார் விசாரணை](https://img.maalaimalar.com/Articles/2019/Mar/201903252242118061_dispute-with-her-husband-woman-suicide-police-investigation_SECVPF.gif)
X
கணவனுடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்து பெண் தற்கொலை- போலீசார் விசாரணை
By
மாலை மலர்25 March 2019 5:12 PM GMT (Updated: 25 March 2019 5:12 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கொரடாச்சேரி அருகே கணவனுடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கொரடாச்சேரி:
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள முசிறியத்தை அடுத்த திட்டாணிமுட்டம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 35). இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார்.
இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் மாரியம்மாள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் சேலத்தை சேர்ந்த வெற்றிவேல் என்பவரை 2-வது திருமணம் செய்து திட்டாணிமுட்டத்தில் தனது வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார். வெற்றிவேல் வீட்டில் இருந்தபடியே தச்சு தொழில் செய்து வந்தார். வெற்றிவேலுக்கு மதுபழக்கம் இருந்தது. மேலும் அவர் தச்சுவேலை செய்து தருவதாக கூறி பலரிடமும் பணம் வாங்கி மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் பணம் கொடுத்தவர்கள் மாரியம்மாளின் வீட்டுக்கு வந்து பணம் கேட்டனர்.
இது குறித்து மாரியம்மாள் தனது கணவர் வெற்றிவேலிடம் கேட்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த மாரியம்மாள் சம்பவத்தன்று வீட்டுக்கு வெளியே வந்து தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதில் உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாரியம்மாளின் உறவினர் கைலாசம் கொடுத்த புகாரின்பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)