search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளாங்கண்ணி அருகே ஆம்னி வேன்- கார் மோதல்: 2 பேர் பலி
    X

    வேளாங்கண்ணி அருகே ஆம்னி வேன்- கார் மோதல்: 2 பேர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வேளாங்கண்ணி அருகே ஆம்னி வேன்- கார் மோதலில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தென்னார் பகுதியை சேர்ந்தவர் அருணகிரி (வயது32), அவரது மனைவி சுகன்யா (26), இவர்களது குழந்தை மோஷிதா(7), ராஜா (35), அவரது மனைவி தேவி(28), பாலமுரளி (36) ஆகியோர் ஆம்னி வேனில் திருவண்ணாமலையில் இருந்து வேளாங்கண்ணி அருகே உள்ள காடன்தேத்தி அய்யனார் கோவிலுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வேனை வந்தவாசி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி ஓட்டிவந்தார்.

    அப்போது நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆர்ச் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது நாகையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி எதிரே வந்த கார் திடீரென ஆம்னி வேன் மீது மோதியது.

    இதில் பாலமுரளி சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் ஆம்னி வேனில் இருந்த 6 பேர் படுகாயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த அனைவரும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்தில் காரில் இருந்த புதுக்கோட்டை மாவட்டம் ராயபுரம் புதுமனை இரண்டாம் தெருவைசேர்ந்த பெரியண்ணா(51), பர்மா காலனியை சேர்ந்த கோதை (74), காரைக்குடி பர்மா காலனியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு அனைவரையும் நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கோதை பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×