search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதம் மாற மனைவி வற்புறுத்தல்: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    மதம் மாற மனைவி வற்புறுத்தல்: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

    மதம் மாற மனைவி வற்புறுத்தியதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    மதுரை:

    திருமங்கலம் அருகில் உள்ள தங்கலச்சேரியை சேர்ந்தவர் ஜெயபாண்டி (வயது 29). இவருக்கு கர்நாடகாவை சேர்ந்த முறுக்கு வியாபாரி புதுராஜா மகள் ஜெயாவுடன் 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் ஜெயா நீங்கள் உடனடியாக மதம் மாற வேண்டும் என்று கணவரிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனாலும் ஜெயபாண்டி மறுத்து விட்டார். இதையடுத்து ஜெயா நகை, பணத்தை எடுத்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ஜெய பாண்டி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஒத்தக்கடை அருகில் உள்ள யானைமலை குவாரியை சேர்ந்தவர் மூர்த்தி (35). இவரது மனைவி மகேஸ்வரி (31). கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதற்கிடையே மகேஸ்வரி ஒத்தக்கடை போலீசில் மூர்த்தி மீது புகார் கொடுத்தார்.

    இதைத் தொடர்ந்து போலீசில் ஆஜரான மூர்த்தி மனைவியுடன் சேர்ந்து வாழ்வதாக உறுதி அளித்து வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த மூர்த்தி வி‌ஷம் குடித்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×