என் மலர்
செய்திகள்

மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி- ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைது
சென்னையில் மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் நசீர் அகமது. இவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில் தனது மகனுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதற்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன்ராஜிடம் ரூ.50 லட்சம் பணம் கொடுத்ததாகவும், அவர் இடம் வாங்கி தராமல் பணத்தை மோசடி செய்து விட்டதாகவும் கூறி இருந்தார்.
இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் மோசடி தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன் ராஜை கைது செய்தனர்.
மோகன்ராஜ் போக்குவரத்து துறையில் செயலாளராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் நசீர் அகமது. இவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில் தனது மகனுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதற்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன்ராஜிடம் ரூ.50 லட்சம் பணம் கொடுத்ததாகவும், அவர் இடம் வாங்கி தராமல் பணத்தை மோசடி செய்து விட்டதாகவும் கூறி இருந்தார்.
இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் மோசடி தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன் ராஜை கைது செய்தனர்.
மோகன்ராஜ் போக்குவரத்து துறையில் செயலாளராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story