என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேப்பம்பட்டு அருகே வாலிபர் வெட்டிக்கொலை
செவ்வாப்பேட்டை:
வேப்பம்பட்டு அடுத்த பெருமாள்பட்டு, நேரு தெருவைச் சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ் (வயது22). நேற்று இரவு அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
அப்போது இருளில் மறைந்து இருந்த மர்ம கும்பல் திடீரென விக்னேசை சுற்றி வளைத்து சரமாரியா வெட்டினர். இதில் தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
உடனே கொலை கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
விக்னேஷ் கொலை செய்யப்பட்டது பற்றி அறிந்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். செவ்வாப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் விக்னேஷ் இருந்தபோது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதன் பின்னரே அவர் வீட்டில் இருந்து வெளியே சென்று உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் நடந்த வாலிபால் போட்டியின் போது விக்னேசுக்கும் சிலருக்கும் இடையே தகராறு உருவாகி இருக்கிறது.
இந்த மோதலில் கொலை நடந்ததா? கடைசியாக விக்னேசின் செல்போனுக்கு பேசியது யார்? கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டின் அருகே வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்