search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆத்தூர் அருகே பேரூராட்சி பில் கலெக்டர் மர்ம மரணம்
    X

    ஆத்தூர் அருகே பேரூராட்சி பில் கலெக்டர் மர்ம மரணம்

    ஆத்தூர் அருகே பேரூராட்சி பில் கலெக்டர் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டியில் வசித்து வந்தவர் உதயசூரியன் (வயது 52). இவருடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆகும். இவர் அயோத்தியாபட்டிணம் பேரூராட்சியில் பில் கலெக்டராக பணியாற்றி வந்தார். உதயசூரியன் கீரிப் பட்டியில் தங்கி மொபட்டில் பணிக்கு சென்று வருவார்.

    இந்த நிலையில் நேற்று அவர் பணி முடிந்து மொபட்டில் கீரிபட்டிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஊத்துமேடு பகுதியில் வந்த போது வண்டியில் மர்மமான முறையில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக மல்லியகரை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து வந்து மல்லியக்கரை போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பில் கலெக்டர் உதயசூரியனை யாராவது கொலை செய்து கொன்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பில் கலெக்டர் மொபட்டில் தொங்கிய நிலையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பானது.

    Next Story
    ×