என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரத்தநாடு அருகே சொத்து தகராறில் அண்ணனுக்கு அரிவாள் வெட்டு- தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு
    X

    ஒரத்தநாடு அருகே சொத்து தகராறில் அண்ணனுக்கு அரிவாள் வெட்டு- தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு

    ஒரத்தநாடு அருகே சொத்து தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 45). தொழிலாளி. இவரது தம்பி வீரமணி (42).இவர்கள் 2 பேருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று மாலை குணசேகரன் மனைவி பார்வதி வீட்டு வாசலில் பெருக்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வீரமணி அவரிடம் தகராறு செய்து பார்வதியை தாக்கினார்.

    இதை பார்த்த குணசேகரன் ஏன் என் மனைவியை தாக்கினாய் என தம்பி வீரமணியை தட்டி கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த வீரமணி அரிவாளால் குணசேகரனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் குணசேகரன் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குணசேகரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்து ஒரத்தநாடு போலீசில் குணசேகரன் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வீரமணியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×