search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடலூர் அருகே உறவினர் வீட்டுக்கு சென்ற இளம்பெண் மாயம்
    X

    கூடலூர் அருகே உறவினர் வீட்டுக்கு சென்ற இளம்பெண் மாயம்

    கூடலூர் அருகே உறவினர் வீட்டுக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கூடலூர்:

    கூடலூர் அருகே கன்னிகாளி புரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் கேரளாவில் உள்ள ஏலத் தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அனிதா (வயது 15). முருகன் வழக்கம் போல் காலையில் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அனிதா மட்டும் தனியாக இருந்துள்ளார். வேலை முடித்து வீட்டுக்கு திரும்பிய முருகன் வீட்டில் அனிதா இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.

    ஆனால் அங்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கூடலூர் தெற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அனிதா ஏதும் பிரச்சினையில் வீட்டை விட்டு வெளியேறினாரா? அல்லது யாரேனும் கடத்திச் சென்றனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×