என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் 3 இடங்களில் விபத்து - கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலி
Byமாலை மலர்20 Feb 2019 10:21 AM GMT (Updated: 20 Feb 2019 10:21 AM GMT)
கோவையில் 3 இடங்களில் நடந்த விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் சேகர். இவர் தேவகோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகி றார்.
இவரது மகன் கோகுல பாண்டியன்(வயது 21) கோவை அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி, வகுப்புக்கு சென்ற வந்தார். சம்பவத்தன்று இவர் நண்பரது மோட்டார் சைக்கிளில் நரசிபுரம் ரோட்டில் சென்றார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
இதில் கீழே விழுந்த கோகுலபாண்டியன் படுகாயம் அடைந்தார். அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்....
பீகார் மாநிலம் சாம்ஷெட்பூர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீத்குமார் மாதோ(25). இவர் கோவை கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவரும், இவரது நண்பரான சதாத் உசைன்(20) என்பவரும் மோட்டார் சைக்கிளில் அன்னூர்-தென்னம்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு வேன் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சஞ்சீத்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த சதாத் உசைன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடகோவை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமசாமி என்பவரது மனைவி ராமாத்தாள்(73). இவர் சாய்பாபாகாலனி பாரதிபார்க் 2-வது வீதியில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த கிரேன் இவர் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த ராமாத்தாளை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக கிரேனை ஓட்டி வந்த டிரைவரான பென்னாகரத்தை சேர்ந்த அஜித்குமார்(21) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் சேகர். இவர் தேவகோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகி றார்.
இவரது மகன் கோகுல பாண்டியன்(வயது 21) கோவை அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி, வகுப்புக்கு சென்ற வந்தார். சம்பவத்தன்று இவர் நண்பரது மோட்டார் சைக்கிளில் நரசிபுரம் ரோட்டில் சென்றார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
இதில் கீழே விழுந்த கோகுலபாண்டியன் படுகாயம் அடைந்தார். அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்....
பீகார் மாநிலம் சாம்ஷெட்பூர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீத்குமார் மாதோ(25). இவர் கோவை கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவரும், இவரது நண்பரான சதாத் உசைன்(20) என்பவரும் மோட்டார் சைக்கிளில் அன்னூர்-தென்னம்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு வேன் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சஞ்சீத்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த சதாத் உசைன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடகோவை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமசாமி என்பவரது மனைவி ராமாத்தாள்(73). இவர் சாய்பாபாகாலனி பாரதிபார்க் 2-வது வீதியில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த கிரேன் இவர் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த ராமாத்தாளை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக கிரேனை ஓட்டி வந்த டிரைவரான பென்னாகரத்தை சேர்ந்த அஜித்குமார்(21) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X