என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் இருந்து விஜயகாந்த் 16-ந்தேதி சென்னை திரும்புகிறார்
Byமாலை மலர்14 Feb 2019 4:23 AM GMT (Updated: 14 Feb 2019 4:23 AM GMT)
கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த் வரும் 16-ந்தேதி காலை சென்னை திரும்புவதாக தேமுதிக அறிவித்துள்ளது. #DMDK #Vijayakanth
சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி அமெரிக்கா சென்றார்.
அவருக்கு அங்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விஜயகாந்த் மனைவி பிரேமலதா உடன் இருந்து கவனித்து வருகிறார்.
கூட்டணிக்கான பேச்சு வார்த்தையில் சுதீஷ் ஈடுபட்டுள்ளார். பா.ஜனதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடும்? எந்த தொகுதிகளில் நிற்கும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
கட்சி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் விஜயகாந்த் ஆலோசனைப்படி நடப்பதாக சுதீஷ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விஜயகாந்த் வருகிற 16-ந்தேதி சென்னை திரும்புகிறார்.
இதுகுறித்து தே.மு.தி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர், பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். சிகிச்சை முடிந்து பூரண நலமுடன் வரும் 16-ந்தேதி (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு தாயகம் திரும்புகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMDK #Vijayakanth
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி அமெரிக்கா சென்றார்.
அவருக்கு அங்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விஜயகாந்த் மனைவி பிரேமலதா உடன் இருந்து கவனித்து வருகிறார்.
விஜயகாந்தும், பிரேமலதாவும் அமெரிக்காவில் இருப்பதால் கட்சி பணிகளை விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் ஆகியோர் கவனித்து வருகிறார்கள். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது.
கூட்டணிக்கான பேச்சு வார்த்தையில் சுதீஷ் ஈடுபட்டுள்ளார். பா.ஜனதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடும்? எந்த தொகுதிகளில் நிற்கும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
கட்சி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் விஜயகாந்த் ஆலோசனைப்படி நடப்பதாக சுதீஷ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விஜயகாந்த் வருகிற 16-ந்தேதி சென்னை திரும்புகிறார்.
இதுகுறித்து தே.மு.தி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர், பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். சிகிச்சை முடிந்து பூரண நலமுடன் வரும் 16-ந்தேதி (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு தாயகம் திரும்புகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMDK #Vijayakanth
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X