search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே விபத்து - பிஎஸ்என்எல் ஊழியர் பலி
    X

    ஸ்ரீபெரும்புதூர் அருகே விபத்து - பிஎஸ்என்எல் ஊழியர் பலி

    ஸ்ரீபெரும்புதூர் அருகே விபத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    மேற்கு தாம்பரம் கேப் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வின் (58). தாம்பரத்தை அடுத்த படப்பையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் போன் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.

    நேற்று ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அலுவலகத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.சென்னை-பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை நோக்கி சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் செல்வின் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார். விபத்தில் இறந்த பி.எஸ்.என்.எல். ஊழியர் செல்வினுக்கு ஜெயராணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    Next Story
    ×