என் மலர்

    செய்திகள்

    கன்னியாகுமரியில் இன்று திடீர் கடல் சீற்றம் - படகு போக்குவரத்து ரத்து
    X

    கன்னியாகுமரியில் இன்று திடீர் கடல் சீற்றம் - படகு போக்குவரத்து ரத்து

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கன்னியாகுமரியில் இன்று காலை வழக்கத்துக்கு மாறாக கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாபயணிகள் செல்ல வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் 3 படகுகளை இயக்கி வருகிறது.

    தினமும் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கி மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும். இன்று காலை வழக்கத்துக்கு மாறாக கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. மேலும் சூறாவளி காற்றும் வீசியது. இதனால் படகு போக்குவரத்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து விவேகானந்தர் மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. கடல் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் படகுகள் இயக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்தனர்.

    இதனால் படகில் செல்ல காத்திருந்த ஏராளமான சுற்றுலாபயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சென்னை அருகே நடுக்கடலில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் கன்னியாகுமரி வரை நீடித்து கடல் சீற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.


    Next Story
    ×