என் மலர்tooltip icon

    செய்திகள்

    தவளக்குப்பத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று பெண் தற்கொலை
    X

    தவளக்குப்பத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று பெண் தற்கொலை

    தவளக்குப்பத்தில் சர்க்கரை நோயால் காலை இழந்ததால் விரக்தி அடைந்த பெண் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

    பாகூர்:

    புதுவை தவளக்குப்பத்தை அடுத்த ஆண்டியார் பாளையம் மாரியம்மன கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி மல்லிகா. (வயது 55). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது.

    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏழுமலை இறந்து விட்ட நிலையில் மல்லிகா சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டார். சர்க்கரை நோயின் தாக்கத்தால் மல்லிகா ஒரு காலை இழந்தார். இதனால் அவர் தினமும் அவதிக்குள்ளாகி வந்தார்.

    இதனால் மனமுடைந்த மல்லிகா சம்பவத்தன்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்றார்.

    இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மல்லிகா நேற்று மாலை பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×