என் மலர்
செய்திகள்

சேலத்தில் என்ஜினீயர் தற்கொலை- போலீசார் விசாரணை
சேலத்தில் மனைவி புரிந்து கொள்ளாத மனவேதனையில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:
சேலம் அம்மாணி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 45) மரைன் என்ஜினீயர். இவருடைய மனைவி தேவி ரம்யா. இவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். திருமணம் முடிந்து ஓராண்டிலேயே கணவன்-மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதனால் பல முறை யுவராஜ் மனைவியுடன் சேர்ந்து வாழ முயற்சித்து பலன் அளிக்காததால் சேலத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரித்தபோது உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் திருமணம் ஆகி 7 ஆண்டு ஆகியும் எனது மனைவி என்னை புரிந்து கொள்ளவில்லை. இதனால் நான் வாழ்ந்தும் பலன் இல்லாததால் என் உயிரை மாய்க்கிறேன் என்று உருக்கமாக எழுதியிருந்தார். அவரது உடல் இன்று பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதனால் அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியில் கண்ணீர் மல்க திரண்டிருந்தனர்.
சேலம் அம்மாணி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 45) மரைன் என்ஜினீயர். இவருடைய மனைவி தேவி ரம்யா. இவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். திருமணம் முடிந்து ஓராண்டிலேயே கணவன்-மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதனால் பல முறை யுவராஜ் மனைவியுடன் சேர்ந்து வாழ முயற்சித்து பலன் அளிக்காததால் சேலத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரித்தபோது உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் திருமணம் ஆகி 7 ஆண்டு ஆகியும் எனது மனைவி என்னை புரிந்து கொள்ளவில்லை. இதனால் நான் வாழ்ந்தும் பலன் இல்லாததால் என் உயிரை மாய்க்கிறேன் என்று உருக்கமாக எழுதியிருந்தார். அவரது உடல் இன்று பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதனால் அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியில் கண்ணீர் மல்க திரண்டிருந்தனர்.
Next Story