search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை மாவட்டத்தில் 650 அரசு பள்ளிகள் மூடல்
    X

    மதுரை மாவட்டத்தில் 650 அரசு பள்ளிகள் மூடல்

    கடந்த ஒரு வாரமாக அரசு பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மதுரை மாவட்டத்தில் 650 பள்ளிகள் செயல்படவில்லை. #JactoGeo #Strike
    மதுரை:

    கடந்த ஒரு வாரமாக அரசு பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு எச்சரித்தும் இன்றும் அவர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 2 ஆயிரத்து 279 உள்ளன. இதில் அரசு பள்ளிகளில் மட்டும் 11 ஆயிரத்து 756 ஆசிரிய-ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். மாவட்டத்தில் 855 அரசு ஆரம்ப, நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது வேலைநிறுத்தம் காரணமாக இதில் 650 பள்ளிகள் செயல்படவில்லை. ஆசிரிய-ஆசிரியைகள் வராததால் மாணவ-மாணவிகளின் வருகையும் குறைந்துள்ளது.

    இந்த நிலையில் தற்போது சத்துணவு ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றதால் மேலும் மூடப்படும் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தெரிகிறது.   #JactoGeo #Strike
    Next Story
    ×