search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணா நினைவு நாள்: மு.க.ஸ்டாலின் தலைமையில் 3-ந்தேதி அமைதிப் பேரணி
    X

    அண்ணா நினைவு நாள்: மு.க.ஸ்டாலின் தலைமையில் 3-ந்தேதி அமைதிப் பேரணி

    பேரறிஞர் அண்ணாவின் 50வது நினைவு நாளையொட்டி மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 3ந்தேதி அமைதிப்பேரணி நடைபெறும் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளனர். #DMK #MKStalin #AnnaMemorialDay
    சென்னை:

    சென்னை மேற்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சி தந்த காவியத்தலைவர், உலகத்தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டுக் கொலு வீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர், தமிழ்மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும், தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் எல்லாம் ஓயாது பாடுபட்ட உத்தமர், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர்- “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்று தம்பிமார் பெரும்படையைக் கண்டு, நெஞ்சுயர்த்தி பெருமிதம் கொண்ட பெருமகன்.

    “மெட்ராஸ் ஸ்டேட்” என்ற பெயரை “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றம் செய்து தாய்க்குப் பெயர் தந்த தனிப்பெரும் தனயன், சுயமரியாதை சுடரொளி, சொக்க வைக்கும் சொற்பொறிவாளர், எழுத்துவேந்தர், தென்னகத்தின் மிகப்பெரும் அரசியல் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் 50-வது நினைவு நாளையொட்டி கழக தலைவர்கள் மு.க.ஸ்டாலின் தலைமையில் மற்றும் கழக முன்னணியினர் பிப்ரவரி-3 (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர்.



    பின்னர் இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்று அடையும்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். #DMK #MKStalin #AnnaMemorialDay

    Next Story
    ×