என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை குடிநீர் ஏரிகளில் 1 மாத தண்ணீரே உள்ளது - குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
Byமாலை மலர்26 Jan 2019 7:56 AM GMT (Updated: 26 Jan 2019 9:51 AM GMT)
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீரின் அளவு 10 சதவீதமே இருப்பதால் ஒரு மாதத்திற்கு பிறகு சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. #Drinkingwater #Chennai
சென்னை:
சென்னை நகருக்கு பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் ஆகிய 4 ஏரிகளில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
மேலும் வீராணம் ஏரி மற்றும் கிருஷ்ணா நதிநீர் திட்டம் மூலமும் குடிநீர் வழங்கப்படுகிறது.
வடகிழக்கு பருவ மழையின் போது நல்ல மழை பெய்தால் 4 ஏரிகளும் நிரம்பும். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை சென்னை நகரை முற்றிலும் ஏமாற்றியது.
கஜா புயல் காரணமாக சென்னையில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திசை மாறியதால் சென்னையில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை.
இதனால் குடிநீர் வழங்கும் 4 ஏரிகளும் நிரம்பவில்லை. ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் அளவு 10 சதவீதம் தான் உள்ளது.
கடந்த ஆண்டு இதே நாளில் 4 ஏரிகளில் 4 ஆயிரத்து 865 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. தற்போது ஆயிரத்து 86 மில்லியன் கனஅடி தண்ணீரே உள்ளது.
இந்த தண்ணீர் சென்னை நகருக்கு குடிநீர் தேவையை ஒரு மாதம்தான் பூர்த்தி செய்யும். இதனால் ஒரு மாதத்திற்கு பிறகு சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
2017-ம் ஆண்டு சந்தித்த குடிநீர் தட்டுப்பாட்டை விட பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் கீழ் ஆந்திராவிடம் இருந்து தண்ணீர் பெற தமிழக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆனால் தங்கள் தேவைக்கே தட்டுப்பாடு நிலவுவதால் தண்ணீரை தற்போது திறக்க முடியாது என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கிருஷ்ணா நதிநீர் இப்போது கிடைக்க வாய்ப்பு இல்லை. மேலும் சென்னையில் நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது.
குடிநீர் வாரியம் சார்பில் தினமும் 1000 மில்லியன் லிட்டர் தண்ணீர் குழாயில் சப்ளை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 650 மில்லியன் லிட்டர் தண்ணீராக குறைக்கப்பட்டுள்ளது.
மாங்காட்டை அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து தண்ணீரை எடுத்து சுத்திகரிப்பு செய்து சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அங்கிருந்து எடுக்கப்படும் தண்ணீர் குழாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு அனுப்பப்படும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Drinkingwater #Chennai
சென்னை நகருக்கு பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் ஆகிய 4 ஏரிகளில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
மேலும் வீராணம் ஏரி மற்றும் கிருஷ்ணா நதிநீர் திட்டம் மூலமும் குடிநீர் வழங்கப்படுகிறது.
வடகிழக்கு பருவ மழையின் போது நல்ல மழை பெய்தால் 4 ஏரிகளும் நிரம்பும். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை சென்னை நகரை முற்றிலும் ஏமாற்றியது.
கஜா புயல் காரணமாக சென்னையில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திசை மாறியதால் சென்னையில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை.
இதனால் குடிநீர் வழங்கும் 4 ஏரிகளும் நிரம்பவில்லை. ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் அளவு 10 சதவீதம் தான் உள்ளது.
கடந்த ஆண்டு இதே நாளில் 4 ஏரிகளில் 4 ஆயிரத்து 865 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. தற்போது ஆயிரத்து 86 மில்லியன் கனஅடி தண்ணீரே உள்ளது.
இந்த தண்ணீர் சென்னை நகருக்கு குடிநீர் தேவையை ஒரு மாதம்தான் பூர்த்தி செய்யும். இதனால் ஒரு மாதத்திற்கு பிறகு சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
2017-ம் ஆண்டு சந்தித்த குடிநீர் தட்டுப்பாட்டை விட பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் கீழ் ஆந்திராவிடம் இருந்து தண்ணீர் பெற தமிழக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆனால் தங்கள் தேவைக்கே தட்டுப்பாடு நிலவுவதால் தண்ணீரை தற்போது திறக்க முடியாது என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கிருஷ்ணா நதிநீர் இப்போது கிடைக்க வாய்ப்பு இல்லை. மேலும் சென்னையில் நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது.
குடிநீர் வாரியம் சார்பில் தினமும் 1000 மில்லியன் லிட்டர் தண்ணீர் குழாயில் சப்ளை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 650 மில்லியன் லிட்டர் தண்ணீராக குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.
மாங்காட்டை அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து தண்ணீரை எடுத்து சுத்திகரிப்பு செய்து சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அங்கிருந்து எடுக்கப்படும் தண்ணீர் குழாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு அனுப்பப்படும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Drinkingwater #Chennai
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X