என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி
போரூர்:
சென்னை எம்.ஜி.ஆர். நகர் சூளை பள்ளம் ஆவுடையப்பன் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் மணிகண்டன் (வயது 19) தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு அவர் அதே பகுதி பாரதியார் 1-வது தெருவைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பாலகணேசுடன் (15) அருகில் உள்ள ஓட்டலில் டிபன் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
எம்.ஜி.ஆர். நகர், அண்ணா மெயின் ரோடு அழகிரிசாமி சாலை சந்திப்பில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது.
இதில் தலையில் படுகாய மடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயமடைந்த பாலகணேஷ் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கிண்டி போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்