என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சோமங்கலத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதல் - 2 கல்லூரி மாணவர்கள் பலி
ஸ்ரீபெரும்புதூர்:
தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது19). இவர் தாம்பரம் பகுதியில் உள்ள கலைக்கல்லூரியில் படித்து வந்தார்.
இவர் உடன்படிக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரதாபன் (18), அடையாறு, சத்யா நகரை சேர்ந்த அரிகிருஷ்ணன் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சோமங்கலம் நோக்கி சென்றனர்.
சோமங்கலம் அருகே, எட்டையூரில் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் திடீரென விக்னேஷ் மற்றும் நண்பர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் விக்னேஷ், பிரதாபன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் அரிகிருஷ்ணன், மற்றொரு மோட்டார் சைக்கிளில் இருந்த சோமங்கலத்தை அடுத்த மேட்டூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சஞ்சய்குமார், அவரது தம்பி சதிஷ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களுக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மோதிய வேகத்தில் 2 மோட்டார் சைக்கிளும் நொறுங்கியது. இதுகுறித்து சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்