என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வில்லியனூரில் தண்ணீர் என்று பூச்சிகொல்லி மருந்தை குடித்தவர் பலி
புதுச்சேரி:
வில்லியனூர் மூர்த்தி நகர் மாரியம்மன கோவில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகன் தமிழரசன் (வயது 24). இவர் பொங்கல் அன்று நண்பர்களுடன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.
அப்போது தண்ணீர் தாகம் எடுத்தது. அங்கு இருந்த தண்ணீர் பாட்டிலில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து வைத்திருந்ததை கவனிக்காமல் எடுத்து குடித்து விட்டார். பின்னர் சிறிது நேரத்தில் வீட்டுக்கு வெளியே மயங்கி விழுந்தார்.
இதைக்கண்ட உறவினர் உடனடியாக அவரை மீட்டு வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தமிழரசன் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேலையன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் வேலரசி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்