search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூரில் தண்ணீர் என்று பூச்சிகொல்லி மருந்தை குடித்தவர் பலி
    X

    வில்லியனூரில் தண்ணீர் என்று பூச்சிகொல்லி மருந்தை குடித்தவர் பலி

    வில்லியனூரில் தண்ணீர் என நினைத்து பூச்சி கொல்லி மருந்தை குடித்தவர் இறந்து போனார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் மூர்த்தி நகர் மாரியம்மன கோவில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகன் தமிழரசன் (வயது 24). இவர் பொங்கல் அன்று நண்பர்களுடன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.

    அப்போது தண்ணீர் தாகம் எடுத்தது. அங்கு இருந்த தண்ணீர் பாட்டிலில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து வைத்திருந்ததை கவனிக்காமல் எடுத்து குடித்து விட்டார். பின்னர் சிறிது நேரத்தில் வீட்டுக்கு வெளியே மயங்கி விழுந்தார்.

    இதைக்கண்ட உறவினர் உடனடியாக அவரை மீட்டு வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தமிழரசன் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேலையன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் வேலரசி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×