search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனியில் மில் காவலாளியிடம் செல்போன்-பணம் கொள்ளை
    X

    தேனியில் மில் காவலாளியிடம் செல்போன்-பணம் கொள்ளை

    தேனியில் மில் காவலாளியிடம் செல்போன்- பணம் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே கருவேலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சின்னமுத்து(வயது74). இவர் தேனி தொழிற்பேட்டையில் உள்ள பருப்பு மில்லில் காவலாளியாக வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு தேனி-கருவேலநாயக்கன்பட்டி சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை பின்தொடர்ந்த மர்மநபர்கள் சின்னமுத்துவை மிரட்டினர்.

    மேலும் அவரிடமிருந்த செல்போன் மற்றும் ரூ.800 பணத்தை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர்.

    இதுகுறித்து தேனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    தேனி நகர் மற்றும் புறநகர் பகுதியில் தனியாக செல்லும் நபர்களிடம் நகை-பணம் பறிப்பது அதிகரித்துள்ளது. மேலும் நடைபயிற்சி செல்லும் பெண்களை குறிவைத்து செயின்பறிப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே நடமாட பீதி

    Next Story
    ×