search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் துரைமுருகனுக்கு சிகிச்சை
    X

    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் துரைமுருகனுக்கு சிகிச்சை

    தி.மு.க. பொருளாளர் துரை முருகனுக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். #DMK #DuraiMurugan
    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சட்டசபையில் நேற்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது அவரது நினைவை போற்றி பேசிய தி.மு.க. பொருளாளர் துரை முருகன் துக்கம் தாங்காமல் கதறி அழுதார்.


    இந்த நிலையில் இன்று அதிகாலையில் துரை முருகனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் துரைமுருகன் ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பினார். இன்று நடைபெற்ற சட்டசபை நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டார். #DMK #DuraiMurugan
    Next Story
    ×